புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

கொல்லங்கோடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை, காக்கவிளை பகுதிகளில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வள்ளவிளையை சேர்ந்த குளோறி (வயது80), காக்கவிளையை சேர்ந்த குஞ்சன் (71) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story