புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

நெகமம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை கைது செய்தனர்
கோயம்புத்தூர்
நெகமம்,
நெகமம் அருகே காட்டம்பட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 8 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் காட்டம்பட்டியை சேர்ந்த மோகன்துரை (வயது 50) என்பதும், அவர் மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் மோகன்துரையை கைது செய்தனர். அதேபோல் நெகமம்-தாராபுரம் சாலையில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஜெகதீஸ்வரன்(35) என்பவரை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story






