புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

கிணத்துக்கடவில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் எதிரே உள்ள டீ கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்த 48 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் (வயது 55) என்பவரை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூர் ரோட்டில் விஜயகுமார் (35) என்பவரது கடையில் சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட 10 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை விற்றதாக விஜயகுமாரை கைது செய்தனர். இதுகுறித்து கிணத்துகடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story