டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது

ராதாபுரம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே கும்பிகுளம் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்திச் செல்வதாக ராதாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் மற்றும் போலீசார் விரைந்து சென்று டிராக்டரை மடக்கிப்பிடித்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பிகுளத்தை சேர்ந்த ஜெய்சங்கர், வள்ளியூரை சேர்ந்த முப்புடாதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





