வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது


வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
x

வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் செல்வக்குமார் (வயது 28). சம்பவத்தன்று இரவு செல்வக்குமார் மட்டும் கடையில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் செல்வக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துமாரி (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் செல்வக்குமாரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து 17 வயது சிறுவனை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story