புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது

புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தலிங்கமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூர் தெற்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சதீஷ் (வயது 55), சித்தலிங்கமடத்தை சேர்ந்த மண்ணப்பன் மகன் ராஜேந்திரன் (42) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்ட எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், புகையிலை பொருட்களை பறிமுதுல் செய்த போலீசார், சதீஷ், ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






