மூதாட்டிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 சிறுவர்கள் கைது
மூதாட்டிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் அருகே உள்ள வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 70). இவர் அப்பகுதியில் உள்ள சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வெங்கமேட்டை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து மல்லிகாவை கத்தியை காட்டி மிரட்டி பணத்ை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story