2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன
கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெங்கடாசலபுரம் பகுதியில் சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, 2 மாட்டு வண்டிகளில் 2 பேர் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பிச்சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





