ஜம்மு-காஷ்மீரில் 2 முறை நிலநடுக்கம்- பீதியில் மக்கள்


ஜம்மு-காஷ்மீரில் 2 முறை நிலநடுக்கம்-  பீதியில் மக்கள்
x
தினத்தந்தி 26 Aug 2022 11:31 AM GMT (Updated: 26 Aug 2022 11:31 AM GMT)

நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ ,அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இன்று 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரெசி மாவட்டத்தில் உள்ள கட்ர பெல்ட்டில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு 3.4 என்கிற ரிக்டர் அளவிலும் மற்றொன்று டோடா மாவட்டத்தில் அதிகாலை 4.07 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் 40 நிமிட இடைவெளியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ ,அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.


Next Story