மோட்டார் சைக்கிள் மோதி 2 மூதாட்டிகள் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மோதி 2 மூதாட்டிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கரூர்
குளித்தலை அருகே உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). தோகைமலை அருகே உள்ள நாகனூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரை (73). இவர்கள் 2 பேரும் தோகைமலையில் இருந்து குண்ணாகவுண்டம் பட்டிக்கு பஸ்சில் வந்துள்ளனர். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் சரஸ்வதி, தாமரை ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story