லாரி மீது வேன் மோதியதில் 2 பெண் பக்தர்கள் பலி


லாரி மீது வேன் மோதியதில் 2 பெண் பக்தர்கள் பலி
x

கிரிவலத்துக்காக திருவண்ணாமலை சென்றபோது லாரி மீது வேன் மோதியதில் 2 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.

பெரம்பலூர்,

மதுரை மாவட்டம் மட்டங்கிப்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி ஜெயமதி (வயது 53). இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 பெண் பக்தர்களும், மார்கழி மாத பவுணர்மியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்வதற்காக ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். அந்த வேனை கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம் (63) ஓட்டினார்.

நள்ளிரவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே அந்த வேன் சென்றது. அப்போது அப்பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி லாரியின் பின்புறத்தில் சிக்கி உருக்குலைந்தது.

2 பெண் பக்தர்கள் சாவு

இந்த விபத்தில் வேனில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்த ஜெயமதி மற்றும் மட்டங்கிப்பட்டியை சேர்ந்த கண்ணனின் மனைவி கோமதி (40) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் டிரைவர் மற்றும் 6 பெண் பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். 9 பெண் பக்தர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.


Next Story