கடம்பூா் அருகே முயல் வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்

கடம்பூா் அருகே முயல் வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனத்துறையினர் கடம்பூர் (கிழக்கு) பீட் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து முயலை வேட்டையாடி சமைத்து சாப்பிட கொண்டு் வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேருக்கும் சேர்ந்து மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்கள். மேலும் அவர்களிடம் இருந்து முயல் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





