மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது நண்பரான குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்த மற்றொரு சசிகுமார் என்பவருடன் குளித்தலைக்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் வாளாந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். குளித்தலை- வாளாந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story