சாத்தூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து - 2 பேர் படுகாயம்


சாத்தூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து - 2 பேர் படுகாயம்
x

சாத்தூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்


சிவகாசி ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 27). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் திருத்தங்கல்லை சேர்ந்த கோமதி என்பவருடன் தனது காரில் சிவகாசியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

காரை மகேஸ்வரன் ஓட்டி வந்தார். கார் சாத்தூர் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் கார் முழுவதும் சேதமான நிலையில், காரின் உள்ளே இருந்த இருவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story