வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

திருநெல்வேலி

கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பூமி குருநாதன் (வயது 44). இவர் கடந்த 17-ந் தேதி நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் பூமிகுருநாதன், கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதேபோன்று நெல்லை அருகே குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கு (34). தனியார் வங்கி ஊழியரான இவர் கடந்த 17-ந்தேதி நெல்லை ரகுமத்நகர் அருகில் அணுகுசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சங்குவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகார்களின்பேரில், நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story