பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வளர்ப்புக்காக 2¾ லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன


பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வளர்ப்புக்காக 2¾ லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன
x

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வளர்ப்புக்காக 2¾ லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வளர்ப்புக்காக 2¾ லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

மீன்குஞ்சுகள்

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்காக விடப்படும். அவ்வாறு விடப்படும் மீன்கள் நன்கு வளர்ந்த உடன் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் வளர்ப்புக்காக மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் ஆழியாறு மேலாளர் சுகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் அணை துணை மேலாளர் ராஜன், மீன் வளர்ச்சி கழக துணை இயக்குனர் தில்லை ராஜன், உதவி இயக்குனர் கதிரேசன், ஆய்வாளர் முகமத் பானு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

60 நாட்களில்...

மீன்வளத்துறை சார்பில் வளர்க்கப்பட்ட கட்லா இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகளும், ரோகு இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மீன் குஞ்சுகளும் என மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரம் மீன் குஞ்சுகள் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் விடப்பட்டன.

நீர்த்தேக்க பகுதியில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் 60 நாட்களில் நன்கு வளர்ந்துவிடும். அதன்பின்னர் மீனவர்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண்டுதோறும் பவானிசாகர் அணையில் 39 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்காக விடப்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன என்று மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story