விழுப்புரம் அருகேஎன்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகேஎன்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

என்ஜினீயர்

விழுப்புரத்தை அடுத்த கயத்தூரை சேர்ந்தவர் ஜெய்தீப் (வயது 29). இவர் பி.இ. கணினி அறிவியல் படித்து முடித்து தற்போது வேலையின்றி இருந்து வருகிறார். கடந்த 22-ந் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜெய்தீப்பின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பினார். அதில் தினமும் வேலை, ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை ஊதியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் சில மணி நேரம் கழித்து டெலிகிராம் மூலம் ஜெய்தீப்பை தொடர்புகொண்ட நபர், சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பி வைத்தார். உடனே ஜெய்தீப், அந்த லிங்கிற்குள் சென்று தனது விவரங்களையும் மற்றும் தனக்கென யூசர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து அந்த நபர் கூறியபடி ரூ.2 ஆயிரத்தை முதலீடு செய்து ரூ.2,800-ஐ திரும்ப பெற்றார்.

ரூ.2¼ லட்சம் மோசடி

அதன் பின்னர் 24, 25-ந் தேதிகளில் ஜெய்தீப், அந்த நபர் கூறிய வங்கிகளின் கணக்குகளுக்கு போன்பே, கூகுள்பே மூலம் 7 தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 560-ஐ அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், ஜெய்தீப்புக்கு சேர வேண்டிய தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story