காவலாளியை தாக்கிய 2 பேர் கைது


காவலாளியை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் காவலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 70). இவர் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அந்த ஓட்டல் முன்பு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளனர். இதனால் இருதயராஜ், ஓரமாக நிறுத்துமாறு கூறி உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து இருதயராஜை தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் வழக்குப்பதிவு செய்து, கால்டுவெல் காலனியை சேர்ந்த பிரதீப்குமார் (20), மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story