வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் கண்ணையா (வயது 48). பழ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் ஐ.ஓ.பி. காலனி பகுதியில் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த பாளையங்கோட்டை அன்னை இந்திரா நகரை சேர்ந்த நம்பிராஜன் (20), சீவலப்பேரியை சேர்ந்த ஜெரின் (23) ஆகியோர் கண்ணையாவை அரிவாளை காட்டி மிரட்டி, ரூ.18 ஆயிரத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நம்பிராஜன், ஜெரின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





