கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

தஞ்சையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தஞ்சாவூர்

தஞ்சை பூக்கார தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அதில் பூக்கார சுப்பிரமணியன் சாமி கோவில் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பூக்கார வடக்கு தெருவை சேர்ந்த கட்டஸ்ரீதர் என்ற ஸ்ரீதர் (வயது 22), அசோக் என்ற சண்முக சுந்தரம் (26) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





1 More update

Next Story