ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேர் கைது


ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2023 6:45 PM GMT (Updated: 28 Feb 2023 6:46 PM GMT)

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று சிதம்பரம்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் (வயது 21), வீரமணிகண்டன் (22) என்பதும், அவர்கள் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story