கள் விற்ற 2 பேர் கைது

நெகமம் அருகே கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெகமம்,
நெகமத்தை அடுத்த வெள்ளாளபாளையம் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 46) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ஆண்டிபாளையம் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்த நாச்சிமுத்து (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





