மடிக்கணினி திருடிய 2 பேர் கைது

மடிக்கணினி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணகுடி:
பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்து 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (வயது 24), வசந்தகுமார் (20) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் பணகுடியை சேர்ந்த தேவேந்திரன் என்பவருடைய மடிக்கணினியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, மடிக்கணினியையும் மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





