மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

நெல்லை டவுனில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 37). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த மாரி மதன் (21), நெல்லை டவுன் அடைக்கலமாதா கோவில் தெருவைச் சேர்ந்த மாதவன் (20) ஆகியோர் ஜான்சனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

1 More update

Next Story