மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் ரோஷன்விஜய் (வயது20). இவர் பாளையங்கோட்டையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். இதை யாரோ திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியதாக துரைபாண்டியன் (52), தமிழன் (51) ஆகியோரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story