நெகமம் அருகே கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது


நெகமம் அருகே கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2023 6:30 PM GMT (Updated: 4 April 2023 6:30 PM GMT)

நெகமம் அருகே கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது

கோயம்புத்தூர்

நெகமம்

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள தாசநாயக்கன்பாளையத்தில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணையில் நெல்லை மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த காளிராஜ் (வயது 32), அந்தியூரை சேர்ந்த பால்ராஜ் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் கோழிப்பண்ணையில் இருந்து 14 மூட்டைகளில் கோழித்தீவனத்தை திருடி அதனை லாரியில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதனை கவனித்த பண்ணை மேலாளர் வெள்ளிங்கிரி (46) இதுகுறித்து நெகமம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story