கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கொலை முயற்சியில் ஈடுபட்ட    2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:47 PM GMT)

கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்


விழுப்புரம் வி.மருதூர் பெருமாள் நகரை சேர்ந்தவர்கள் சாமிக்கண்ணு மகன் வெங்கடேசன் என்கிற பவுல் வெங்கடேசன் (வயது 36), திருஞானம் மகன் கணபதி (20). இவர்கள் இருவரின் மீதும் விழுப்புரம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 6.11.2022 அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை முன்விரோதம் காரணமாக வெங்கடேசன், கணபதி உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கல் மற்றும் உருட்டுக்கட்டையால் கொலை வெறியுடன் தாக்கியதாக அவர்கள் இருவரையும் விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரும் இதுபோன்று பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் வெங்கடேசன், கணபதி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேசன், கணபதி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story