போக்சோவில் 2 பேர் கைது


போக்சோவில் 2 பேர் கைது
x

வெவ்வேறு இடங்களில் போக்சோவில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரை டாக்டர் பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சகாயராஜை கைது செய்தனர்.

சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (35). இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான அந்த சிறுமி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தாா். அப்போது சந்தேகமடைந்த டாக்டர்கள் அவரிடம் விசாரித்தபோது அவருக்கு 17 வயதில் திருமணமானது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சாணார்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.



Next Story