கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது


கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 March 2023 12:15 AM IST (Updated: 2 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் சம்பவத்தில் பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

அன்னூர்,

கள்ளக்காதல் சம்பவத்தில் பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 27). இவர் தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா (27). இவர்களது மகன் சாய் சர்வேஷ் (3). ஸ்ரீதரன் தனது குடும்பத்தினருடன் அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள செந்தாம்பாளையம் பகுதியில் தங்கி உள்ளார்.

இந்தநிலையில் ஸ்ரீதரனுக்கும், அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை கீர்த்தனா கண்டித்து உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரன் கீர்த்தனாவை தாக்கி உள்ளார்.

2 பேர் கைது

இந்தநிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் உள்பட 3 பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கீர்த்தனா அன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஸ்ரீதரன், அவரின் கள்ளக்காதலி ரம்யா (26), நண்பர் பழனி (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து கீர்த்தனாவுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான ரம்யா, பழனியை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று ரம்யா, பழனி 2 பேரும் கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜே.புதூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு அன்னூர் போலீசார் விரைந்து சென்று ரம்யா, பழனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story