ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
x

சென்னையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக கஞ்சா கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்காணித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை

சென்னையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்காணித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா அருகே சந்தேகத்துக்கு உரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனர்.

இதில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதனை ஆந்திராவில் இருந்து அவர்கள் கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அந்த பெண் கோடம்பாக்கம் ஆண்டாள் நகரை சேர்ந்த ஷீபா ஜோதி (வயது 31) என்பதும், மற்றொரு நபர் திருவேற்காடு ஐயப்பன் நகர் முதல் தெருவை சேர்ந்த பாஸ்கர் (36) என்பதும் தெரிய வந்தது.

ஷீபா ஜோதி மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.


Related Tags :
Next Story