விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை


விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
x

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், மொளசி பகுதிகளில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல்

விவசாயி

மோகனூர் அருகே உள்ள அரசநத்தம் ஊராட்சி சந்தரகிரியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 47), விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (38). இந்தநிலையில் வேலுச்சாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இது குறித்து முத்துலட்சுமி நேற்றுமுன்தினம் மது போதையில் வந்த வேலுச்சாமியிடம் கேட்டார். இதில் மனமுடைந்த வேலுச்சாமி மருந்து அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வேலுச்சாமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி மோகனூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து வேலுசாமிக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

முதியவர் தற்கொலை

பள்ளிபாளையம் அடுத்த மொளசி ராக்கியவலசு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (63). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி குஞ்சம்மாள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த பெரியசாமி நேற்றுமுன்தினம் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அதை பார்த்த அவரது மகன் சண்முகம் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பெரியசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மொளசி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story