இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி


இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலிஇருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

செங்கல்பட்டு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த தாழங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபாலசாமி (வயது 47). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் கடப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சூனாம்பேடு அடுத்த தேண்பாக்கம் அருகே வந்தபோது எதிர் திசையில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது கோபாலசாமின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கோபாலசாமி தூக்கி வீசப்பட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த சூனாம்பேடு போலீசார் கோபால்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குன்றத்தூர் அடுத்த தண்டலம் ஆகாஷ் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 24). இவரது நண்பர் சீனிவாசன் (24), இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன் தினம் இரவு இவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சீனிவாசன் ஓட்டிச்சென்றார்.

பின்னால் மோகனசுந்தரம் அமர்ந்து இருந்தார். குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மோகனசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மோகனசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சீனிவாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Next Story