பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி


பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி
x
திருச்சி

வெவ்வேறு விபத்தில் பால் வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.

பால் வியாபாரி

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள குமார வயலூர் பாரதி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65). பால் வியாபாரியான இவர் சம்பவத்தன்று பால் வியாபாரத்திற்காக தனது மொபட்டில் வயலூர்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவர் மொபட்டுடன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திருச்சி தென்னூர் ஸ்டீல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் (50). இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்கரை மதுரைரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்சுதீன் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story