வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு
x

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் இறந்தனர்.

தென்காசி

சுரண்டை:

புளியங்குடி அருகே சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி செல்வக் களஞ்சியம் (வயது 65). இவருடைய மருமகள் ஆனந்தி (35). இவர் கடந்த 2-ந் தேதி சுரண்டையில் இருந்து சிந்தாமணிக்கு தனது மாமியார் செல்வக்களஞ்சியத்தை தனது மொபட்டில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். வீரசிகாமணி மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள வேகத்தடையில் சென்ற போது மொபட் திடீரென நிலை தடுமாறியது. இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த செல்வக்களஞ்சியம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை செல்வ களஞ்சியம் பரிதாபமாக இறந்தார். இதேபோல் நேற்று முன்தினம் ஈச்சந்தாவை சேர்ந்த மரிய அந்தோணி என்பவரது மகன் ராஜாமணி (35) தனக்கு சொந்தமான மொபட்டில் நடுவக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருமலைசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராஜாமணி நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை ராஜாமணி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துகள் குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story