வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 54). இவருக்கு மதுபழக்கம் இருந்து வந்தது. இதனால் குடும்பத்துக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (31). ஆட்டோ டிரைவர் இவருடைய மனைவி சுகன்யா தேவி (31). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகளும், மகனும் உள்ளனர். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுகன்யாதேவி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story