இளம்பெண் உள்பட 2 பேர் பலி


இளம்பெண் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு சம்பவத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கரூர்

இளம்பெண் சாவு

கரூர் மாவட்டம், மாயனூர் புதுத்தெருவை சேர்ந்தவர் சிலம்பவேலார். இவரது மகள் கிருத்திகா (வயது 20). இவருக்கும், முசிறியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆடிப்பெருக்கையொட்டி கிருத்திகா தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்லாண்டியம்மன் கோவில் காவிரி ஆற்றங்கரையில் கிருத்திகா குளிக்க சென்றார். அப்போது அவரது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருத்திகா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

கரூர் சிட்டி கேப் தெருவை சேர்ந்தவர் கணேசன் (50). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி ரஞ்சினி என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத தால்கணேசன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story