டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை


டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

டிரைவர்

விக்கிரமசிங்கபுரம் அனவன் குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சொரிமுத்து. இவருடைய மகன் முத்துராஜ் (வயது 28). பொக்லைன் டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முத்துராஜ் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்து மயங்கினார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முத்துராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம்பாடு மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52), தொழிலாளி. இவருடைய மனைவி தங்கஜோதி. இவர்களுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கஜோதி கோபித்து கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் ஒருவாரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் விரக்தியடைந்த ஆறுமுகம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் செல்வமணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story