கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது


கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2023 7:00 PM GMT (Updated: 31 Jan 2023 7:00 PM GMT)

தேவாரத்தில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேவாரத்தில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தேவாரம் அய்யப்பன் கோவில் அருகே சந்தேகப்படும்படி மூதாட்டி உள்பட 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒரு பெண் தப்பியோடிவிட்டார். மீதம் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வடக்குதெரு மூணாண்டிபட்டியை சேர்ந்த, முத்துபேச்சி (வயது 60), முருகன் (57), தப்பியோடியவர் கவிதா (45) என்றும் தெரியவந்தது. அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 4 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துபேச்சி உள்பட 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story