தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x

தனித்தனி சம்பவத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ரஜினி (வயது 32). கூலித் தொழிலாளி. வீட்டில் ஏற்பட்டகுடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக ரஜினி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரஜினி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி ( 68). விவசாயி. இவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து தனது மனைவி பெரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கந்தசாமி விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story