நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரவுடிகளுக்கு வினியோகித்த 2 பேர் கைது


நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரவுடிகளுக்கு வினியோகித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Sep 2023 7:58 PM GMT (Updated: 25 Sep 2023 7:24 PM GMT)

நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரவுடிகளுக்கு வினியோகித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

தேடுதல் வேட்டை

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து பிற மாவட்ட ரவுடிகளுக்கு வினியோகம் செய்ததாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதையடுத்து தாயனூர் கீழக்காடு கீழபுறம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சிவசக்தி (வயது 21), தாயனூர் வடக்கு தெருவை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் கர்ணன் (வயது 23) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், தென் மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகளை அழைத்து வந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி அளித்ததோடு, நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து மற்ற மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story