போதை மாத்திரை, ஊசி வைத்திருந்த 2 பேர் கைது


போதை மாத்திரை, ஊசி வைத்திருந்த 2 பேர் கைது
x

போதை மாத்திரை, ஊசி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 22), ரமணா மகன் ரமேஷ் (36) ஆகியோர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை மாத்திரை, ஊசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story