மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x

மதுவிற்ற 2 பேர் கைது

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் நேற்று ஆலங்கோட்டை டாஸ்மாக் கடை பாரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வெள்ளிச்சந்தை காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல ராஜாக்கமங்கலம் டாஸ்மாக் கடை பாரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக தேவதாஸ் (60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 47 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story