சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2023 6:45 PM GMT (Updated: 5 May 2023 6:46 PM GMT)

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ஜெயமணி தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அதே ஊரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 53) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபாா்த்த போலீசார் ரவிக்குமாரை கைது செய்து அவரிடமிருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்ததாக அதே ஊரை சேர்ந்த சடையன் (62) என்பவரை கைது செய்த போலீசாா் அவரிடமிருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story