தக்கலை அருகேமதுவிற்ற 2 பேர் கைது

தக்கலை அருகேமதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள சாமியார்மடம் பகுதியில் தக்கலை போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுக்கடை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 43) மற்றும் திருவிதாங்கோட்டை சேர்ந்த ஸ்டெட் மென் (46) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 81 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1880 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





