மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது


மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது
x

வாலாஜாவில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

வாலாஜா

வாலாஜாவில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாவை அடுத்த வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோடீஸ்வரன் (வயது 25), சரவணன் (22). இவர்கள் இருவரும் பாலாற்றிலிருந்து மாட்டுவண்டிகளில் மணல் கடத்திக்கொண்டு வாலாஜா பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த போலீசார் இருவரையும் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.



1 More update

Next Story