விபத்தில் 2 பேர் காயம்


விபத்தில் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 16 July 2023 7:00 PM GMT (Updated: 16 July 2023 7:00 PM GMT)

விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

காயல்பட்டினம் ஓடக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 79). இவரது மனைவி சாகுல் ஹமீது பாத்திமா (55). இவர்கள் சம்பவத்தன்று ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். உடன்குடி ரோடு மெய்யூர் வெங்கட்ராமானுஜபுரம் அருகே வரும்போது வந்த வழியாக ேமாட்டார் சைக்கிளில் தினேஷ் என்பவர் வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சாகுல் ஹமீது பாத்திமா, தினேஷ் காயம் அடைந்தனர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story