லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Aug 2023 8:45 PM GMT (Updated: 21 Aug 2023 8:46 PM GMT)

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் உள்ள ஒரு டீக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்ற ஒரு முதியவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 70) என்பதும், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 57 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று கருப்பம்பாளையம் பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த அம்பராம்பாளையத்தை சேர்ந்த சையத் முகமத்(58) என்பவரை கைது செய்து, 116 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.620 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story