லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:47 PM GMT)

நத்தம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே பரளி மற்றும் மணக்காட்டூர் பகுதியில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரளி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நத்தம்- கோவில்பட்டியை சேர்ந்த பூபதி (வயது 50), மணக்காட்டூரில் விற்பனை செய்த கருப்பையா (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 லாட்டரி சீட்டுகள், 2 செல்போன்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story