பழனி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

பழனி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில், பழனி தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில், அவர்கள் பாலசமுத்திரத்தை சேர்ந்த ரங்கசாமி (வயது 26), கோட்டைமுத்து (26) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





