கள்ளக்குறிச்சி கலவரத்தில் போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய 2 பேர் கைது


கள்ளக்குறிச்சி கலவரத்தில் போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய 2 பேர் கைது
x

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய 2 பேரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துக்கள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டு பள்ளி சொத்துக்களக சேதப்படுத்தியவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.இந்த கலவரத்தில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய சின்னசேலம் தாலுக்கா தென்பொன்பரப்பி கிராமம் இளையபெருமாள் மகன் பரத் (வயது-32) மற்றும் போலீஸ் மீது கற்கள் வீசி வன்முறையில் ஈடுபட்ட மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (45) என்பவரை வீடியோ ஆதாரங்கள் வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story